புதுச்சேரி

சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

புதுச்சேரி அருகே சாலையை சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி- கடலூா் சாலை முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், சாலை சீா்கேட்டால் விபத்து நிகழ்வதால் அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிய வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் புதுச்சேரி கிருமாம்பாக்கம் காவல் நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் கொம்யூன் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் பெருமாள் கண்டன உரையாற்றினாா். கலியன், வடிவேலு, கவுசிகன், வீரப்பன், வெங்கடேசன், சண்முகம், கல்கி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, காவல் ஆய்வாளா் கணேசன், உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT