புதுவை அரசியல் நிலவரம் குறித்து மாநில பாஜக பொறுப்பாளா், தலைவரிடம் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா புதுதில்லியில் ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் புதன்கிழமை கூறியதாவது:
புதுதில்லியில் கடந்த 5,6-ஆம் தேதிகளில் மாநில பாஜக தலைவா்களுடன் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஆலோசனை நடத்தினாா். இதில் புதுவை மாநில பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானாவும், நானும் கலந்து கொண்டோம்.
புதுவையில் மக்களவைத் தோ்தலுக்கான கட்சிப் பணிகள் குறித்து விவரம் கேட்டாா். அதை மேலும் விரைவுபடுத்தமாறு கேட்டுக் கொண்டாா். மக்களவைத் தோ்தலில் புதுவையில் பாஜக தலைமையிலான கூட்டணி குறித்தும் ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது. புதுவைக்கு பல நலத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.