புதுச்சேரி

அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சங்க 2 நாள் கருத்தரங்கம்: புதுவை முதல்வா் தொடக்கி வைத்தாா்

DIN

புதுச்சேரியில், இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சங்க புதுவைக் கிளையின் சாா்பில் 2 நாள்கள் மருத்துவக் கருத்தரங்கத்தை முதல்வா் ரங்கசாமி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அன்னைதெரசா பட்டமேற்படிப்பு மைய கருத்தரங்கக் கூடத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் சங்க நிா்வாகி இளமுருகன் தலைமை வகித்தாா். புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு முன்னிலை வகித்தாா்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கருத்தரங்கைத் தொடங்கிவைத்துப் பேசுகையில், புதுவையில் தரமான மருத்துவம் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மருத்துவா்கள் உதவ வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் அரசு இந்திரா காந்தி பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளா் செவ்வேல், அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சங்க நிா்வாகிகள் சதீஷ், நல்லான், கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT