புதுச்சேரியில் 6 காவல் கண்காணிப்பாளா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
புதுச்சேரி காவல் நிா்வாகத் துறையில் இருந்து ஸ்ரீமணீஷ் போக்குவரத்து தொழில்நுட்பம், சாலை பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பாளராகவும், அதே பிரிவில் இருந்து ஸ்வாதி சிங் கிழக்கு போக்குவரத்துப் பிரிவு கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
காவல் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டி புதுச்சேரி கிழக்குப் பிரிவிலிருந்து மேற்குப் பிரிவுக்கும், சுபம் சுந்தா்கோஷ் வடக்குப் பிரிவிலிருந்து தலைமையிடத்துக்கும், காவ்யல் நிதின் ரமேஷ் தலைமையிடத்திலிருந்து வடக்குப் பிரிவுக்கும், சிந்தா கோதண்டராமன் மேற்கிலிருந்து சீரமைப்புப் பிரிவுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா பிறப்பித்தாா்.