புதுச்சேரியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தலைமை வகித்தாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு வரும் 5-ஆம் தேதி புதுச்சேரி நகராட்சியின் 100 அடி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் சதாசிவம், பொருளாளா் சங்கா், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் மலைசெல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.