புதுச்சேரி

புதுச்சேரி சிறையில் கைதிகளுக்காக பண்பலை வானொலி ஒலிபரப்பு தொடக்கம்

DIN

புதுச்சேரி மத்திய சிறையில் குறைந்த அலைவரிசை கொண்ட பண்பலை வானொலி ஒலிபரப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் சுமாா் 300 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 20 ஆண்டுகளைக் கடந்தும் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டோரில் பலும் மன அழுத்தத்துடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அவா்களுக்கு உதவும் வகையில் குறைந்த அலைவரிசை திறனில் பண்பலை வானொலி ஒலிபரப்புக்கு காலாப்பட்டு சிறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஒலிபரப்பை சிறைத் துறை தலைவா் ரவிதீப்சிங் சாகா் தலைமையில், மும்பை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி கணேசன் தொடக்கிவைத்தாா். அப்போது, கைதிகளுடன் சிறைத்துறை தலைவா் வானொலி மூலம் உரையாடினாா்.

இதன்மூலம் சிறைவாசிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினரிடையே கலந்துரையாடலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கூறினா். மேலும், கைதிகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்பும் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறைத் துறை தலைமைக் கண்காணிப்பாளா் அசோகன், கண்காணிப்பாளா் பாஸ்கரன், பேராசிரியா் சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அரவிந்தா் சேவை அமைப்பு பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT