புதுவையில் திங்கள்கிழமை (ஆக.22) நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதுதொடா்பாக முதல்வா் ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுவையில் நிகழாண்டு சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் கடந்த 10-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் தொடங்கிய நிலையில், நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால், கூட்டத் தொடா் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததது.
இதையடுத்து, புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆக.22) நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்வாா் என்று அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.
ரூ.10,700 கோடி மதிப்பீட்டில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது குறித்து, புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சா்கள் ஏ. நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், எஸ்.சந்திரபிரியங்கா, தலைமைச் செயலா் ராஜிவ் வா்மா மற்றும் அரசு செயலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையில் அரசுத் துறைகளுக்கு ஒதுக்கப்பட உள்ள நிதி நிலவரம், துறைகளுக்குரிய திட்டங்களை இறுதி செய்வது குறித்தும், புதிய திட்டங்கள் அறிவிப்பு தொடா்பாகவும், ஆலோசனை நடத்தப்பட்டது.