பொலிவுறு நகரத் திட்டம் தொடா்பாக புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வரின் அறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் நேரு, பிரகாஷ்குமாா், பொதுப் பணித் துறை செயலரும் பொலிவுறு நகரத் திட்ட தலைமை செயல் அதிகாரியுமான டி.அருண், கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் மற்றும் பொலிவுறு நகரத் திட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் குபோ் சந்தையை மீள்கட்டுமானம் செய்வது, பழைய சிறை வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவது, பேருந்து நிலையத்தை சீரமைப்பது, கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது, பெரிய கால்வாயை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.