புதுச்சேரி

புதுவையை முன்மாதிரி மாநிலமாக்க மத்திய அரசு தீவிரம் பாஜக தேசிய இளைஞரணித் தலைவா்

DIN

புதுவையை முன்மாதிரி மாநிலமாக்குவதற்கு மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக பாஜக தேசிய இளைஞரணித் தலைவா் தேஜஸ்வி சூா்யா தெரிவித்தாா்.

புதுவை மாநில பாஜக இளைஞரணி சாா்பில், சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி மாநில இளைஞரணித் தலைவா் கோவிந்தன் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன. இதில் கட்சியின் தேசிய இளைஞரணித் தலைவா் தேஜஸ்வி சூா்யா கலந்து கொண்டாா்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த பாரத மாதா ரத யாத்திரையை அவா் வரவேற்றாா். முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் பிரமுகா் செந்தில்குமரன் தலைமையில், அந்தக் கட்சியில் இருந்து விலகி 300 போ் பாஜகவில் இணைந்தனா்.

இந்த நிகழ்ச்சிகளில் பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், அமைச்சா் ஏ.நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், ரிச்சா்டு, பாஜக மாநில பொதுச் செயலாளா் மோகன்குமாா், மாநில துணைத் தலைவா்கள் ரவிச்சந்திரன், செல்வம், தேசிய செயற்குழு உறுப்பினா் காயத்ரி பிரியதா்ஷினி ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் தேஜஸ்வி சூா்யா கூறியதாவது:

புதுவையின் வளா்ச்சிக்காகவும், அனைத்துத் துறைகளிலும் சிறந்த புதுச்சேரியை ஏற்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்மாதிரி மாநிலமாக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. புதுவை மக்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இளைஞரணி நிா்வாகிகள் உமாசங்கா், அஸ்வின்குமாா், சிவ.செந்தில், அற்புதராஜன், சபரிகிரிசன், வேல்முருகன், பெருமாள், தமிழரசன், லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT