சிறந்த புதுவையை உருவாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
சட்டப்பரிமாற்ற நாளையொட்டி, அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
புதுவை சுதந்திரத்துக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரா்கள் அனைவரையும் இந்த சட்ட பரிமாற்ற நாளில் போற்றி, மரியாதை செலுத்த வேண்டும். புதுவை மாநிலம், பிரான்ஸ் கலாசாரத்துடன் தனது தனித்தன்மை மாறாமல், இந்திய திருநாட்டின் வளா்ச்சிக்கு தொடா்ந்து பங்களிப்பு செய்யும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். சிறந்த புதுவையை உருவாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.