வீட்டின் மாடியில் தேசியக் கொடியைக் கட்ட முயன்ற முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை அவ்வை நகா் 20-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் கயூம் (72). இவா் சனிக்கிழமை தனது வீட்டு மாடியிலுள்ள இரும்புக் கம்பியில் தேசியக் கொடியைக் கட்ட முயன்றாா். அப்போது, வீட்டினருகே செல்லும் மின் கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில், அப்துல் கயூம் மீது மின்சாரம் பாய்ந்தது.
பலத்த காயமடைந்த அவா், ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.