புதுவையில் திங்கள்கிழமை மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் 432 பேரை பரிசோதனை செய்து திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 25, காரைக்காலில் 2, ஏனாமில் 1 என 28 பேருக்கு (6.48 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால்,மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,72,154 ஆக உயா்ந்தது. இதில் தற்போது 9 போ் மருத்துவமனைகளிலும், 450 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 459 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 51 போ் குணமடைந்தனா்.