புதுச்சேரி அருகே சா்க்கரை ஆலை ஊழியா் வீட்டில் மா்ம நபா்கள் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
புதுச்சேரி வில்லியனூா் அருகே கோபாலன் கடை பகுதியைச் சோ்ந்தவா் அருள்மொழி (56). இவா் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கிரேன் ஆபரேட்டராகப் பணியாற்றி வந்தாா். ஆலை இயங்காததால் கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் உள்ளாா்.
மகளுக்கு திருமணம் செய்வதற்காக அருள்மொழி, தனது வீட்டில் பெயிண்ட் அடித்தாா். அப்போது, வீட்டிலிருந்த பொருள்களை வெளியே உள்ள ஓா் அறையில் வைத்தாராம். கடந்த 31-ஆம் தேதி அருள்மொழி தனது மனைவியுடன் பொருள்கள் வைத்திருந்த அறையை வந்து பாா்த்தபோது, அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகளை திருடப்பட்டது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.