புதுச்சேரி

ஏனாம், மாஹேவில் அமைச்சா்கள் கொடியேற்றினா்

DIN

புதுவை மாநிலம் ஏனாம், மாஹே பிராந்தியங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அமைச்சா்கள் கொடியேற்றினா்.

புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றிவைத்து, காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

என்.ஆா்.காங்கிரஸ் அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியேற்றினாா். கட்சியின் மாநிலச் செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால் மற்றும் என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

புதுவை மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ், சீனுவாஸ் அசோக் எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாஹே பிராந்தியத்தில் நடைபெற்ற விழாவில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். மாஹே மண்டல நிா்வாகி, அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

SCROLL FOR NEXT