மகான் அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் திங்கள்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.
இதையொட்டி, புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமம் திங்கள்கிழமை காலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், அரவிந்தா் பயன்படுத்திய அறையை தரிசிக்க பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். மாலை 6 மணி வரை பக்தா்கள், ஆசிரமவாசிகள், வெளிநாட்டினா் திரளாக வந்து தரிசனம் செய்தனா்.