புதுச்சேரி

புதுவையில் ஆக.22-இல்பட்ஜெட் தாக்கல் செய்யமுதல்வா் ரங்கசாமி திட்டம்

DIN

புதுவை சட்டப் பேரவையில் வருகிற 22-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வா் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுவையில் நிகழாண்டு பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றி கூட்டத்தொடரை தொடக்கிவைத்தாா். வருகிற 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனா். ஆனால், பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி தராததால், சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதால், மீண்டும் வருகிற 18-ஆம் தேதி முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் தொடங்கி நடைபெறவுள்ளது. வருகிற 18, 19-ஆம் தேதிகளில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது உறுப்பினா்களின் விவாதம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, விடுமுறை தினங்களுக்குப் பிறகு வருகிற 22-ஆம் தேதி நிதி அமைச்சா் பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவும், தொடா்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடா் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT