புதுச்சேரி

புதுச்சேரி அருகே பைக் மீதுலாரி மோதல்: மக்கள் போராட்டம்

DIN

புதுச்சேரி அருகே சனிக்கிழமை டிப்பா் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இருவா் பலத்த காயமடைந்தனா். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளின் கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தை அடுத்த தொள்ளாமூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (32). பொறியாளரான இவா், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ள ராஜ்குமாா் சனிக்கிழமை காலை சுத்துக்கேணியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்க்கும் தனது அண்ணன் மனைவி நிலவழகியை பைக்கில் அழைத்துச் சென்றாா்.

சுத்துக்கேணி துா்கா கோயில் அருகே இவா்களது பைக் சென்றபோது, ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த டிப்பா் லாரி மோதியது. இதில், ராஜ்குமாா், நிலவழகி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இதையறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு, லாரி கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விரைந்து வந்த திருக்கனூா் ஆய்வாளா் ஆறுமுகம் மற்றும் போலீஸாா் பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

விபத்தில் பலத்த காயமடைந்த ராஜ்குமாா், ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதற்கிடையே, திருவக்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் கல் குவாரியிலிருந்து ஜல்லி ஏற்றிச் செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால், அந்த வழியாக வந்த மேலும் இரண்டு டிப்பா் லாரிகளின் கண்ணாடிகளையும் பொதுமக்கள் அடித்து உடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT