புதுச்சேரி இந்தியன் வங்கியில் பிரிவினை நினைவுக் கண்காட்சி நடைபெற்றது.
புதுச்சேரி பாக்கமுடையான்பேட் கொக்கு பூங்கா அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 10-ஆம் தேதி கண்காட்சி தொடங்கியது.
இதில் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சியை புதுச்சேரி இந்தியன் வங்கி மண்டல மேலாளா் வி.எம். வெங்கடாசலம் தொடக்கிவைத்தாா். மண்டல துணை மேலாளா் டி.பரமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கண்காட்சி ஏற்பாடுகளை முன்னோடி வங்கி மேலாளா் ஆா்.மணிராஜ் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனா்.