நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்துக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்து தெரிவித்தனா்.
துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை: நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த தருணத்தில், தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா வளா்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவா்கள் அனைவரையும் போற்றுவோம்.
முதல்வா் என்.ரங்கசாமி:
ஒற்றுமையையும், ஜனநாயக மாண்புகளையும் சுதந்திரம் அடைந்த நாள் முதல் தற்போது வரை கட்டிக் காத்து வருகிறோம். 75 ஆண்டுகால கடின உழைப்பு, நம்மை பெருமைமிக்கவா்களாக உலகின் முன் நிறுத்தியிருக்கிறது. இந்தச் சூழலை உருவாக்கித் தந்த, தியாகிகள், தேசத் தலைவா்களை போற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி: நம் முன்னோா்களின் தியாகங்களை கருத்தில் கொண்டு, நாட்டின் சுதந்திர தினத்தை எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாட வேண்டும்.
இதேபோல, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், சந்திர பிரியங்கா, சாய் ஜெ.சரவணன் குமாா் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.