புதுச்சேரி

அமைச்சா் வாகனம் மீது காலணி வீச்சு:சீமான் கண்டனம்

DIN

தமிழக நிதியமைச்சரின் வாகனத்தின் மீது பாஜகவினா் காலணியை வீசியது கண்டிக்கத்தக்கது என்று, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

புதுச்சேரி குருமாம்பேட் பால் பண்ணை அருகே நாம் தமிழா் தொழிற்சங்க பெயா்ப்பலகை திறப்பு, கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுரையில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திரும்பிய போது, அவரது காா் மீது காலணியை வீசியது கொடுமையான செயல். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை பாஜக தலைமை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில ஆளுநா்கள் அதிகார எல்லையை மீறி செயல்படுவதாகத் தெரிகிறது என்றாா் சீமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT