புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி, கடலூா் கே - புட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தின் தலைவா் தனசேகரன், துணைத் தலைவா் சுகுமாறன், செயலாளா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கல்லூரி சாா்பில் முதல்வா் மலா்க்கண், கே - புட்ஸ் நிறுவன உரிமையாளா் விஸ்வநாதன் ஆகியோா் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனா்.
உணவு தொழில்நுட்பத் துறைத் தலைவா் திருச்செல்வம், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமாா், துறைத் தலைவா்கள் அருண்மொழி, ரேணுகாதேவி ஆகியோா் பங்கேற்றனா்.