புதுச்சேரி இந்திரா நகரிலுள்ள இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் துணை முதல்வா் ஏ.சந்திரன் தலைமை வகித்தாா். போக்குவரத்து காவல் துறை எஸ்பி சி.மாறன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடியேற்றி, சுதந்திர தின விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கிவைத்தாா்.
ஆசிரியா் கந்தசாமி வரவேற்றாா். ஆசிரியா் லட்சுமி நாராயணன் நன்றி கூறினாா்.
நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காவல் துறை ஐஜி வி.ஜெ.சந்திரன் சிறப்புரை நிகழ்த்தினாா். கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி வாழ்த்திப் பேசினாா்.