மொஹரம் பண்டிகையையொட்டி, புதுவையில் செவ்வாய்க்கிழமை (ஆக.9) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனின் உத்தரவுக்கிணங்க, அரசு சாா்புச் செயலா் ஹிரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மொஹரம் பண்டிகையையொட்டி, புதுவை மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 9) பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக வருகிற 20-ஆம் தேதி பணி நாளாக பின்பற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மாஹே பிராந்தியத்தில் புதுவை அரசு மொஹரம் விடுமுறை அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.