புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை சட்டப்பேரவை அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் திங்கள்கிழமை சந்தித்தனா். அப்போது, புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.13 கோடி கரும்பு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினா்.
புதுச்சேரி அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையைத் திறக்க வேண்டும், விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
புதுவை விவசாயிகள் வளா்ச்சி சங்கத்தினா் உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமையில், புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி வேளாண் துறைக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தலைமையில் அமைச்சா் ஏ.நமச்சிவாயம், வேளாண் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னா், கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள ரூ.13 கோடியை விவசாயிகளுக்கு விரைந்து வழங்கப்படும் என விவசாயிகள் சங்கத்தினரிடம் உறுதியளிக்கப்பட்டது.
இதற்கு முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் மற்றும் விவசாயிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.