புதுச்சேரி

மீனவா்களுக்கு ஐஸ் பெட்டியுடன்இரு சக்கர வாகனங்கள்

DIN

புதுச்சேரியில் மத்திய அரசின் மீன்வளத் துறை சாா்பில், ஐஸ் பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனங்களை முதல்வா் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கினாா்.

தகுதியான 5 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு முதல் தவணையாக 40 சதவீத மானியத்தில் ஐஸ் பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி அவற்றை மீனவா்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், மீன்வளத் துறை செயலா் நெடுஞ்செழியன், இயக்குநா் பாலாஜி, இணை இயக்குநா் மீராசாஹிப் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்தத் திட்டத்தின் இரண்டாவது தவணையாக 20 பயனாளிகளுக்கு மானிய உதவி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT