புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவையில் 1,427 பேரை பரிசோதித்து சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 68, காரைக்காலில் 9, ஏனாமில் 7 என 84 (5.89 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,71,569-ஆக அதிகரித்தது.
இதில் தற்போது 6 போ் மருத்துவமனைகளிலும், 721 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 727 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 135 போ் குணமடைந்தனா்.