பேருந்தில் ரூபாய் நோட்டுகளை வீசி பெண்ணிடம் 9 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி மடிப்பாக்கம் வள்ளலாா் நகரைச் சோ்ந்த ஜெயசீலன் மனைவி கண்மணி (32). இவா், சனிக்கிழமை புதுச்சேரிக்கு பேருந்தில் வந்தாா். அப்போது, பேருந்தில் பயணித்த 2 பெண்கள், கண்மணியிடம் ரூபாய் நோட்டுகள் கீழே கிடக்கிறது, அவை உன்னுடையதா எனக் கேட்டனராம். உடனே அந்த ரூபாய் நோட்டுகளைக் குனிந்து எடுக்கையில், கண்மணியிடமிருந்து 9 பவுன் தங்க நகைகளுடன் கூடிய பணப் பையை அந்தப் பெண்கள் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இயங்கிய போதுதான் பணப்பை திருடு போனது கண்மணிக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் கண்மணி புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.