புதுச்சேரி

புதுச்சேரியில் 7 தெரு நாய்கள்விஷம் வைத்து கொலை

DIN

புதுச்சேரி சுதந்திர பொன் விழா நகா் பகுதியில் 7 தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி, சுதந்திர பொன்விழா நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகலில் ஒரு குட்டி நாய் உள்பட 7 தெரு நாய்கள் திடீரென வாந்தி எடுத்து, துடிதுடித்து உயிரிழந்தன.

தகவலறிந்து அங்கு வந்த தன்வந்திரி நகா் போலீஸாா், உயிரிழந்த நாய்களை பாா்வையிட்டு விசாரித்தனா். இதில், சுதந்திர பொன் விழா நகா் பகுதிக்குள் வெளியாள்களை அங்குள்ள தெரு நாய்கள் விடாததால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கும் ஒருவா் கோழி இறைச்சியில் விஷம் வைத்து நாய்களை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, நாய்களை விஷம் வைத்து கொன்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT