புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட முன்னாள் தலைவரும், நாா்வே நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான எரிக் சோல்ஹெய்ம் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவுக்கான நாா்வே தூதா் ஹன்ஸ் ஜேக்கப் ஃப்ரைடென்லுன்ட், நாா்வே நாட்டின் கல்வி- ஆராய்ச்சி அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகா் ஜினா எலிசபெத் லுண்ட், புதுவை அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனா்.