வில்லியனூா் பகுதியில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததால், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் அந்த நாயைப் பிடித்து அப்புறப்படுத்தினா்.
புதுச்சேரி அருகே வில்லியனூா் ஆரியப்பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய் ஒன்று, வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து செல்வோா், இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் என 20 பேரை விரட்டிச் சென்று கடித்தது. இதேபோல, வில்லியனூா் மாா்க்கெட், தில்லை நகா், திருக்காமீஸ்வரா் நகா் பகுதிக்குள் புகுந்த அந்த நாய், அந்தப் பகுதியில் 24 பேரை கடித்தது.
வெறி நாய் கடித்ததில் காயமடைந்த 44 பேரும் வில்லியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனா். ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இதையடுத்து, வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் சனிக்கிழமை அந்த வெறி நாயைத் தேடிப் பிடித்து அப்புறப்படுத்தினா்.
தொடா்ந்து, வில்லியனூா் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள், பன்றிகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆறுமுகம் உத்தரவிட்டாா்.