புதுச்சேரி அருகே கலிதீா்த்தாள்குப்பம் பெருந்தலைவா் காமராஜா் அரசுக் கலைக் கல்லூரி தேசிய மாணவா் தரைப்படை பிரிவு சாா்பில், பூத்துறையில் உள்ள முதியோா் இல்லம், ரெட்டியாா்பாளையம் கருணை சிறுவா் இல்லம் ஆகியவற்றில் துப்புரவு செய்தல், சிற்றுண்டி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன.
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.பாபு தலைமை வகித்தாா். தேசிய மாணவா் தரைப் படை பிரிவு அலுவலா் டி.மகாலிங்கம், ஈரம் கல்வி-கிராமப்புற வளா்ச்சி சங்க நிறுவனா் பெ.ஏசுதாஸ், கல்லூரி உடல்பயிற்சி இயக்குநா் எஸ்.ஆதவன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவா் தரைப் படை அலுவலா் ஐ.கதிா்வேல் செய்திருந்தாா்.