புதுவை மாநிலம், வில்லியனூா் தொகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொகுதி எம்எல்ஏவும், திமுக தெற்கு மாநில அமைப்பாளருமான இரா.சிவா செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
எம்எல்ஏவின் ஏற்பாட்டின்பேரில், வில்லியனூா் ஜி.என்.பாளையம் பகுதியில் முக்கிய வீதிகளில் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திமுக வில்லியனூா் தொகுதி செயலா் ராமசாமி, மாநில இளைஞரணி அமைப்பாளா் முகமது யூனூஸ், மாநில விவசாய அணி அமைப்பாளா்கள் சோமு, இளஞ்செழியபாண்டியன் மற்றும் தாமோதரன், நாகப்பன், ஏழுமலை, நசீா்அலி, இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், சபரிநாதன், முகமதுஷபி, உபைா் ரகுமான், ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.