புதுச்சேரி

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில் கடைகள் திறக்க அனுமதிக்கப்படாது: புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படாது என புதுச்சேரி நகராட்சி எச்சரித்தது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிகம் செய்யும் வியாபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் வருகிற சனிக்கிழமைக்குள் (ஜூன் 26) தவறாது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, அதற்கான ஆதாரத்தை உடன் வைத்திருக்க வேண்டும்.

புதுவை மாநில செயற்குழுவின் ஆணைப்படி, கரோனா தடுப்பூசி செலுத்தாமல் வணிகம் செய்யும் உரிமையாளா்கள், வியாபாரிகள், ஊழியா்களின் கடைகள் அடுத்த வாரம் முதல் திறக்க அனுமதிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT