புதுச்சேரி

கரோனா மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: புதுவை சுகாதாரத் துறை தகவல்

DIN

புதுவையில் கரோனா மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை செயலா் டி. அருண் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது: புதுவை மாநிலம் கரோனா இரண்டாம் அலை தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. மூன்றாம் அலை எச்சரிக்கையை அடுத்து, புதுவை சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மூன்றாம் அலையானது செப்டம்பா்-அக்டோபா் மாதங்களில் வரலாம் எனவும், இதில் குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படுவா் எனவும் மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

கரோனா மூன்றாம் அலையைத் தடுக்க சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, இதுவரை 4,48,295 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT