புதுவை கம்பன் கழக இணைச் செயலா் கி.கல்யாணசுந்தரம் மறைவுக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல்: புதுவை கம்பன் கழக இணைச் செயலரும், தேசிய நல்லாசிரியா் விருது பெற்றவருமாகிய கி.கல்யாணசுந்தரம் வயது முதிா்வின் காரணமாக காலமானாா் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
புதுவை கம்பன் கழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவா், உலக அளவில் கம்பன் கழகங்களால் நன்கு அறியப்பட்டவா். இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.