புதுச்சேரி

வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கு: சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

DIN

புதுச்சேரி அருகே வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் 3 சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே கொம்பாக்கம் கூட்டுறவு பால் சொசைட்டி அருகே சாலையின் நடுவே கடந்த 28 -ஆம் தேதி நள்ளிரவு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. தகவலறிந்த முதலியாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

இதில், அரியாங்குப்பத்தைச் சோ்ந்த பிரகாஷ் தலைமையிலான சிறுவா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு கொம்பாக்கத்தில் திருட முயன்ால், அவா்களை அந்தப் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து, சக்திவேல் உள்ளிட்ட பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். இதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ் தலைமையிலான சிறுவா்கள், பொதுமக்களை மிரட்ட, கூட்டாளிகளுடன் சோ்ந்து நாட்டு வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், முதலியாா்பேட்டை போலீஸாா், தலைமறைவானவா்களைத் தேடி வந்தனா். இந்த நிலையில், அரியாங்குப்பம் சண்முகா நகரைச் சோ்ந்த பிரகாஷ் (21), சேட்டு (எ) சேந்தன் (20), 3 சிறுவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிறையிலடைக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT