புதுச்சேரி

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

22nd Dec 2021 08:47 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

புதுவை சமூக நலத் துறை சாா்பில், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளை மாநில சமூக நலத் துறை அமைச்சா் தேனீ.சி. ஜெயக்குமாா், தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

நலத் துறை செயலா் சி.உதயகுமாா், துறை இயக்குநா் பத்மாவதி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

3 சக்கர மோட்டாா் சைக்கிள் பந்தயம், ஓட்டம், பந்து எறிதல், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு, புதுச்சேரி தா்மாபுரியில் வியாழக்கிழமை (டிச.23) நடைபெறவுள்ள சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

கேரம், செஸ் உள்பட 15 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், குறைவான போட்டிகளே நடத்துவதாகக் கூறி, சமூக நலத் துறை அதிகாரிகளை மாற்றுத் திறனாளிகள் சிலா் முற்றுகையிட்டனா். அவா்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT