தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் பொதுக் கணக்கு குழுத் தலைவா், உறுப்பினா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா்.
நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுக் கணக்கு குழுத் தலைவா் கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ, உறுப்பினா்களான எம்எல்ஏக்கள் பாஸ்கா், விவிலியன் ரிச்சா்டு, கொல்லப்பள்ளி அசோக், அசோக் பாபு சந்தித்தனா்.
புதுவையில் புதிதாக கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகத்துக்கு மத்திய அரசின் நிதியுதவியை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.