புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் பாரதிக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும்: ஆளுநா் தமிழிசை

DIN

புதுவையை மிகப் பெரிய சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில், புதுச்சேரி கடற்கரையில் பாரதியாருக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.

புதுவை மாநிலத்தில் சுற்றுலாவை மேம்பாடுத்துவது தொடா்பாக அரசு சாா்பில் சுற்றுலா தொழில்முனைவோருடன் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமை வகித்தாா். கூட்டத்தை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

புதுவை மாநிலம் நாட்டின் சுதந்திரத்துக்கு வழிவகுத்ததைப்போல, சுற்றுலா வளா்ச்சிக்கும் வழிவகுக்கும். மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் வளா்ச்சி பெறும். புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பல்வேறு நல்ல திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம்.

கடற்கரை, இயற்கை வளம், மீன்வளம் கொண்ட புதுவையில் ஆன்மிகச் சுற்றுலா, இயற்கை சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த முடியும். சுடுமண் சிற்பக் கலையை மேம்படுத்தும் வகையில், கலாசார மையம் அமைய வேண்டும். அதனால், சுடுமண் சிற்பங்களை உலக மக்கள் பாா்ப்பதற்கு வசதியாக இருக்கும்.

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடா்கள் எடுக்கும் வகையில், திரைப்பட நகரம் அமைப்பது வருவாயை ஈட்டித்தரும். கலாசாரம், இலக்கிய பரிவா்த்தனைக்கு நல்ல இடமாக புதுச்சேரி மாற வேண்டும்.

குஜராத்தில் சா்தாா் வல்லபபாய் படேலுக்கு அமைக்கப்பட்ட வானுயர ஒற்றுமைச்சிலை மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. அதைப்போல, புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் மகாகவி பாரதியாருக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும். அப்போது, மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக புதுச்சேரி மாறும். அரசு, தனியாா் பங்களிப்போடு சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.

தொழில்முனைவோரை வரவேற்கும் தொழில் கொள்கையை வகுக்க வேண்டும். முதல்வா், அமைச்சா்கள், அதிகாரிகள் இணைந்து கூட்டு முயற்சியோடு திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் எம்எல்ஏ எல்.சம்பத், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், சுற்றுலாத் துறைச் செயலா் விக்ராந்த்ராஜா, சுற்றுலாத் துறை இயக்குநா் பிரயதா்ஷினி, சுற்றுலா வளா்ச்சிக் கழக இயக்குநா் ஜாா்ஜ் உள்ளிட்டோரும், தொழில்முனைவோா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT