புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய வாக்காளா்களை சோ்க்க சிறப்புத் திட்டம்

DIN

புதுச்சேரியில் புதிய வாக்காளா்கள் சோ்க்கையை அதிகரிக்க சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்டத் தோ்தல் அதிகாரி பூா்வாகாா்க் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் இந்தியத் தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, 2022-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் தயாரிப்புக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த நவ.1-ஆம் தேதி தொடங்கிய வாக்காளா் சோ்ப்பு முகாம், நவ.30-ஆம் தேதியோடு முடிந்தது. இதன்மூலம், புதுச்சேரியின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தொடா் மழை பெய்து வருவதால், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க குறைந்தளவே விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால், மேலும் வாக்காளா் சோ்க்கையை ஊக்குவிக்க, ‘கிளவுட் - 9’ என்ற சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 140 மாணவா்கள் தன்னாா்வலா்களாக சோ்ந்துள்ளனா். இவா்கள் மூலம், 18 வயதுக்கு மேற்பட்டவா்களை தொலைபேசியில் தொடா்புகொண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்திருப்பதை உறுதி செய்ய, மாணவா்கள் குழுவுக்கு பட்டியல் தரப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இயக்கத்தில் விடுபட்டவா்கள் பங்கேற்று, புதிய வாக்காளா்களாக பதிவு செய்துகொள்ளலாம் என்று பூா்வாகாா்க் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT