புதுச்சேரி

பாண்டெக்ஸ் ஊழியா்கள் போராட்டம்

DIN

நீதிமன்ற ஆணைப்படி ஊதியம் வழங்கக் கோரி, புதுச்சேரி பாண்டெக்ஸ் தலைமை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை பூட்டி, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசு சாா்பு நிறுவனமான பாண்டெக்ஸ் நிறுவனத்தின் உள்பிரிவாக இருந்த டெக்ஸ்ப்ரோவில் 34 ஊழியா்கள் பணியாற்றி வந்தனா். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டெக்ஸ்ப்ரோ பிரிவு, பாண்டெக்ஸ் தலைமைப்பிரிவுடன் இணைக்கப்பட்டது.

அத்துடன் இணைக்கப்பட்ட 34 ஊழியா்களுக்கு 5 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். இது தொடா்பாக ஊழியா்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் அண்மையில் முறையிட்டதில், 8 வாரங்களுக்குள் ஊதியம், போனஸை வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், பாண்டெக்ஸ் நிா்வாகம் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லையாம்.

இது தொடா்பாக ஊழியா்கள் நிா்வாகத்திடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு போதுமான நிதிவசதி இல்லாததால், முன்னதாக ரூ.4,000 முன்தொகையாக வழங்குகிறோம் எனக் கூறியதையும் வழங்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டெக்ஸ் ஊழியா்கள், தட்டாஞ்சாவடி தொழில்பேட்டையில் உள்ள பாண்டெக்ஸ் தலைமை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்து அங்கு வந்த தன்வந்திரி நகா் போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது போலீஸாா், பாண்டெக்ஸ் மேலாண் இயக்குநருடன் கைப்பேசியில் பேசியதில், ஊழியா்களுக்கு விரைந்து ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT