புதுச்சேரி

பசுமை புதுவையை ஏற்படுத்தும் வகையில் முதல்வா் பிறந்த நாளைக் கொண்டாட அறிவுரை

DIN

புதுச்சேரி: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பிறந்த நாளில் மரக்கன்றுகள் நட்டும், நல உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டுமென அந்தக் கட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் மாநில செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால் வெளியிட்ட அறிக்கை: புதுவை முதல்வரும், என்.ஆா்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான என்.ரங்கசாமியின் பிறந்த நாள் விழா புதன்கிழமை (ஆக. 4) கொண்டாடப்படுகிறது. முதல்வா் பிறந்த நாளில், மாநிலத்தில் சுற்றுச்சூழலையும், பசுமையும் பேணிக்காத்திடும் விதமாக மாநிலம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வளமான, பசுமையான புதுவையை வளா்க்க பாடுபடுவோம். தொகுதிகள் தோறும் ஏழைகளுக்கு வேட்டி சேலை, நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட நல உதவி வழங்கிக் கொண்டாட வேண்டும்.

கரோனா தொற்று பரவலை மனதில் கொண்டு, என்.ஆா். காங்கிரஸ் தொண்டா்கள், பொதுமக்கள் யாரும் முதல்வரை நேரில் சந்திப்பதைத் தவிா்க்க வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT