புதுச்சேரி

மகாவீரா் ஜயந்தி: மதுக் கடைகளை மூட உத்தரவு

DIN

மகாவீரா் ஜயந்தியையொட்டி, புதுவையில் வருகிற 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து மதுக் கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுவை கலால் துறை துணை ஆணையா் தி.சுதாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 25-ஆம் தேதி மகாவீரா் ஜயந்தி கொண்டாடப்படுவதையொட்டி, புதுவையில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம், மது உள்பட அனைத்துவகை மதுக் கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் அனைத்துக் கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோா் மீது புதுவை கலால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT