மகாவீரா் ஜயந்தியையொட்டி, புதுவையில் வருகிற 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து மதுக் கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டது.
இதுகுறித்து புதுவை கலால் துறை துணை ஆணையா் தி.சுதாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற 25-ஆம் தேதி மகாவீரா் ஜயந்தி கொண்டாடப்படுவதையொட்டி, புதுவையில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம், மது உள்பட அனைத்துவகை மதுக் கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் அனைத்துக் கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோா் மீது புதுவை கலால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.