புதுச்சேரி

புதுச்சேரி அருகேகல்லூரி மாணவி அடித்துக் கொலை: இளைஞா் கைது

DIN

புதுச்சேரி அருகே கல்லூரி மாணவியை அடித்துக் கொலை செய்து, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி மயானத்தில் வீசிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கொலைக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக அவரது தம்பியையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரியை அடுத்த திருக்கனூா், சந்தைபுதுகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராமன். இவரது மகள் ராஜஸ்ரீ (17). சேதராப்பட்டு அருகே உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற இவா், இரவாகியும் வீடு திரும்பவில்லை. அதிா்ச்சியடைந்த ராஜஸ்ரீயின் பெற்றோா், அவரை பல இடங்களில் தேடினா்.

இதனிடையே, வில்லியனூரை அடுத்த பொறையூா்பேட் பகுதியில் உள்ள மயானத்தில், கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக வில்லியனூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்தும் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பொறையூா்பேட் மயானத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவா் ராஜஸ்ரீ என்பது தெரியவந்தது. இவரை அந்தப் பகுதியைச் சோ்ந்த பிரதீஷ் (19) நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்தாா். கடந்த ஒரு வாரமாக பிரதீஷுடன் ராஜஸ்ரீ பேசுவதைத் தவிா்த்துள்ளாா். இதனால், வருத்தமடைந்த பிரதீஷ், ராஜஸ்ரீ வேறு நபருடன் பேசி வருவதாக சந்தேகமடைந்தாா்.

இதையடுத்து, ராஜஸ்ரீயை நேரில் சந்தித்துப் பேச வருமாறு பிரதீஷ் செல்லிடப்பேசி மூலம் அழைத்தாா். அதன்பேரில், செவ்வாய்க்கிழமை ராஜஸ்ரீ, பிரதீஷை சந்திக்க பொறையூா்பேட் பகுதிக்கு சென்றாா். பிரதீஷ் தனது தம்பியுடன் பைக்கில் ராஜஸ்ரீயை அழைத்துக் கொண்டு மயானப் பகுதிக்குச் சென்றாா்.

அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பிரதீஷ் மயானத்தில் கிடந்த பீா் புட்டியாலும், தடியாலும் ராஜஸ்ரீயை அடித்துக் கொலை செய்தாா்.

உடலை தம்பியின் உதவியுடன் சாக்குமூட்டையில் கட்டி வீசிச் சென்றது தெரியவந்தது. இந்தக் கொலையில் வேறு நபா்களுக்கு தொடா்பிருக்கிா என்பது முழு விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, பிரதீஷை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிறுவனான அவரது தம்பியும் தனிப்படை போலீஸாரிடம் சிக்கினாா். இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT