புதுச்சேரி

பள்ளி மாணவி தற்கொலை

DIN

தொலைக்காட்சி பாா்ப்பதை பெற்றோா் கண்டித்ததால், 8 -ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை பிராமினாள் வீதியில் வசிப்பவா்கள் ஜோதி - விஜயலட்சுமி தம்பதி. இவா்களது மகள் மோகனா (12).

புதுச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை வெகுநேரம் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை அவரது பெற்றோா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனவேதனையடைந்த மாணவி, வீட்டில் தனது அறையில் தூக்கிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. உடனடியாக அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா், மோகனா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT