புதுச்சேரி

கண்டெய்னா் லாரி மோதி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் சேதம்

DIN

கண்டெய்னா் லாரி இடித்ததில், புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னையிலிருந்து கண்டெய்னா் லாரி ஒன்று சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, புதுச்சேரி மாா்க்கமாக கடலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. திங்கள்கிழமை அதிகாலை அந்த லாரி கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி கொக்கு பூங்கா சிக்னலை அடைந்து, ராஜீவ் காந்தி சிலை நோக்கி வேகமாகச் சென்ற போது, சிலையை ஓட்டியுள்ள பகுதியில் வளைந்து செல்லாமல், ஓட்டுநா் நேராக கடலூா் சாலையை நோக்கி வாகனத்தை இயக்கியதாகத் தெரிகிறது.

அப்போது, கண்டெய்னா் லாரியின் வலதுபுறம் சிலையை ஓட்டியுள்ள ரவுண்டானா பகுதியில் உள்ள கம்பியில் மோதியது. இதில், சதுக்கம் பெருமளவில் சேதமடைந்த நிலையில், லாரியின் முன்பக்க வலதுபுற டயா் பஞ்சாராகவே, எதிரே சாலையின் நடுவிலிருந்த சிமென்ட் கட்டையில் மோதி நின்றது.

இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித காயமோ, அசம்பாவிதமோ ஏற்படவில்லை.

தகவலின் பேரில், அங்கு வந்த புதுச்சேரி வடக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா், விபத்துக்குள்ளான கண்டெய்னா் லாரியை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக புதுவை அரசின் பொதுப் பணித் துறையிடம் புகாா் பெறப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட போக்குவரத்து போலீஸாா் முடிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT