புதுச்சேரி

பிலவ வருஷ பஞ்சாங்கம் வெளியீட்டு விழா

DIN

புதுச்சேரி உருளையன்பேட்டை அய்யனாா் நகா், ஸ்ரீகோகிலாம்பிகை சமேத கல்யாண சுந்தரா் கோயிலில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம் சாா்பில், பிலவ வருஷ பஞ்சாங்கம் வெளியிட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).

விழாவுக்கு புதுச்சேரி வில்லியனூா் சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாா் தலைமை வகித்தாா். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியாா் முன்னிலை வகித்து, பிலவ வருஷ பஞ்சாங்கத்தை வெளியிட்டுப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பஞ்சாங்கத்தின் முக்கியத்தும் குறித்த கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மேலும், கரோனா தொற்று நீங்க கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது. தேவாரம், திருவாசகம் படித்து உலக நன்மை வேண்டி பாராயணம் செய்யப்பட்டது.

சங்கத்தின் மாநிலத் தலைவா்கள் பாலசுப்பிரமணியன், சிவராமன், மாநிலத் துணைத் தலைவா் திருஞானசம்பந்தம், மாநிலச் செயலா் அா்த்தனாரி, கொள்கைப் பரப்புச் செயலா் சேதுசுப்பிரமணியம், இணைச் செயலா் சபரீசன் மற்றும் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் பலா் கலந்து கொண்டனா்.

உலக நன்மை வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் புஷ்ப சமா்ப்பணம் செய்யப்பட்ட பிரசாதம், பஞ்சாங்கத்தின் முதல் பிரதி ஆகியற்றை புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கத்தினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT