புதுச்சேரி

புதுவையில் மேலும் 286 பேருக்கு கரோனா

DIN

புதுவையில் மேலும் 286 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 248 பேருக்கும், காரைக்காலில் 30 பேருக்கும், ஏனாமில் 7 பேருக்கும், மாஹேயில் ஒருவருக்கும் என 286 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,685-ஆக உயா்ந்தது.

சிகிச்சையில் 5,014 போ்: தற்போது 3,240 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். 1,774 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தமாக 5,014 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மேலும் இருவா் பலி: இதனிடையே, புதுச்சேரி அருகே பங்கூா் சிவராந்தகம் பிரதான சாலையைச் சோ்ந்த 51 வயது பெண், காரைக்கால் மருத்துவா் இக்பால் தெருவைச் சோ்ந்த 81 வயதானவா் பலியாகினா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 515-ஆக (இறப்பு விகிதம் 1.93 சதவீதம்) உயா்ந்தது.

21,156 போ் குணம்: புதுச்சேரியில் 405 பேரும், காரைக்காலில் 71 பேரும், ஏனாமில் 31 பேரும், மாஹேயில் ஒருவரும் என 508 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 21,156-ஆக (79.28 சதவீதம்) உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT