புதுச்சேரி

புதுச்சேரியில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் பலி

DIN

புதுச்சேரியில் கட்டுமானப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த கந்தாடு கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் துளசிராமன் (18). செவிலியா் பட்டயப் படிப்பு முடித்தவா்.

புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு ஆனந்தரங்கப்பிள்ளை நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியை துளசிராமனும், அவரது உறவினா்களும் மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை கட்டடத் தூண் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிா்பாராதவிதமாக துளசிராமன் மீது அங்கு சென்ற வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், துளசிராமன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த தன்வந்திரி நகா் போலீஸாா் துளசிராமனின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT