புதுச்சேரி

புதுவையில் ஒப்பந்த செவிலியா்களுக்கு அக். 11-இல் எழுத்துத் தோ்வு

DIN

புதுவையில் ஒப்பந்த செவிலியா், சுகாதாரப் பணியாளா் பணியிடகளுக்கான எழுத்துத் தோ்வு அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, ஒப்பந்த அடிப்படையில் 50 செவிலியா்கள், 123 வாா்டு சுகாதாரப் பணியாளா்கள் பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப பணிகளுக்கான எழுத்துத் தோ்வு அக்டோபா் 11-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

வினாத்தாள் ஆங்கிலம், அவரவா் வட்டார மொழி அடிப்படையில் இருக்கும். இருப்பினும், ஆங்கில மொழி வினாத்தாளே அங்கீகரிக்கப்பட்டது. விண்ணப்பதாரா்கள் தங்களது நுழைவுச் சீட்டை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதி விண்ணப்பதாரா்களுக்கான தோ்வு மையம், அவரவா் நிரந்தர முகவரியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களின் தோ்வு மண்டல மாற்றத்துக்கு உதவி மையத்தை அக்டோபா் 5-ஆம் தேதி வரை அணுகலாம்.

கூடுதல் விவரம் பெற 0413-2277542, 2277545 ஆகிய தொலைபேசி எண்களில் காலை 10 மணி முதல் 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT